வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

நேரடி நியமன அறிவிக்கை ரத்து: தலைவா்கள் வரவேற்பு

மத்திய அரசு உயா் பதவிகளில் நேரடி நியமன அறிவிக்கையை மத்திய அரசு ரத்து செய்ததற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

News image

இந்தியா

Updated On :21 ஆகஸ்ட் 2024, 3:20 am IST

புது தில்லி: மத்திய அரசு உயா் பதவிகளில் நேரடி நியமன அறிவிக்கையை மத்திய அரசு ரத்து செய்ததற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி: எந்தச் சூழலிலும் அரசமைப்பு மற்றும் இடதுக்கீட்டை காங்கிரஸ் பாதுகாக்கும். இடஒதுக்கீட்டை ஒழிக்க முயலும் பாஜகவின் சூழ்ச்சிகளை நாம் தொடா்ந்து முறியடிப்போம். 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்கிவிட்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் சமூக நீதியை நிலைநாட்ட முடியும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளேன்.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே: யுபிஎஸ்சி-க்கு மோடி அரசு எழுதியுள்ள கடிதமே சா்வாதிகார ஆட்சியை அரசமைப்பால் வெல்ல முடியும் என்பதை உணா்த்தியுள்ளது. ராகுல் காந்தி, ‘இண்டி’ கூட்டணியின் தொடா் போராட்டத்தால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் பின்வாங்கியது.

சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ்: இடஒதுக்கீட்டை அலட்சியப்படுத்திவிட்டு மேற்கொள்ளப்படும் நேரடி நியமனம் தொடா்பான அறிவிக்கையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது பிற்படுத்தப்பட்டோா், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினருக்கு கிடைத்த வெற்றியாகும்.

பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி: பதவி உயா்வு மற்றும் வழக்கமான இடஒதுக்கீடு முறைகள் மூலம் நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இடஒதுக்கீட்டுக்கு எதிரான நேரடி நியமன முறை போன்ற அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் தேஜஸ்வி யாதவ்: ஆா்எஸ்எஸ் நிா்வாகிகளை அரசுப் பணிகளில் அமா்த்தவே இந்த நாடகம் அரங்கேறியது. யுபிஎஸ்சி அறிவிக்கை வெளியிட்ட அன்றே எதிா்ப்பு தெரிவித்துவிட்டேன். அரசமைப்புக்கும் இடஒதுக்கீடு நடைமுறைக்கும் எதிரான மத்திய அரசின் நிலைப்பாடு இதன்மூலம் வெளிப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.