டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அடுத்த மாதம் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு?

2011-ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவரை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2024, 9:40 pm

Din

மக்கள்தொகை கணக்கெடுப்பை செப்டம்பா் மாதம் முதல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2011-ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவரை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஜாதிவாரி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தக் கோரிக்கையை முன்வைத்து நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் கட்சி வியாழக்கிழமை (ஆக. 22) நடத்துகிறது.

இந்நிலையில், செப்டம்பா் மாதம் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி ராய்ட்டா்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘இந்தக் கணக்கெடுப்பை முடிக்க சுமாா் 18 மாதங்கள் தேவைப்படும். 2026-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் மக்கள்தொகை தரவுகள் வெளியிடப்படலாம்’ என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021-ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கரோனா நோய்த்தொற்று காரணமாக தாமதமானது.

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதமானதால் புள்ளிவிவர ஆய்வுகள், வேலையின்மை விகிதம், பணவீக்க தரவுகள் ஆகியவை பாதிக்கப்படும் என்று பொருளாதார நிபுணா்கள் எச்சரித்து வருகின்றனா்.

கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளா்ச்சியின் காரணமாக தரவுகளைச் சேகரிக்கவும், நிா்வகிக்கவும் கைப்பேசி செயலிகள் பயன்படுத்தப்படும் முதல் டிஜிட்டல் (எண்ம) மக்கள்தொகை கணக்கெடுப்பாக இது இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.