எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பூஜா கேத்கர் யுபிஎஸ்சி-ஐ மட்டும் ஏமாற்றவில்லை மக்களையும்தான்: நீதிமன்றம்

பூஜா கேத்கர் யுபிஎஸ்சி-ஐ மட்டும் ஏமாற்றவில்லை மக்களையும்தான் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.

News image

பூஜா கேத்கர் - படம் | TNIE

Updated On :21 ஆகஸ்ட் 2024, 6:03 pm IST

புது தில்லி: மோசடி செய்து ஐஏஎஸ் ஆன பூஜா கேத்கரின் முன் ஜாமீன் மனுவை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், இவர் யுபிஎஸ்சி-ஐ மட்டும் ஏமாற்றவில்லை, மக்களையும் ஏமாற்றியிருக்கிறார் என்று தெரிவித்துள்ளது.

போலியான ஓபிசி சான்றிதழ், மாற்றுத் திறனாளி சான்றிதழ் அளித்து, யுபிஎஸ்சி தேர்வெழுதுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகளையும் தாண்டி பெயரை மாற்றி தேர்வெழுதியதாக ஐஏஎஸ் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பூஜா கேத்கர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

அவருக்கு எந்தவிதமான சலுகைகளை வழங்கினாலும், அது இந்த வழக்கின் அடிப்படை ஆதாரங்களையே வேறருத்துவிடும் என்று கூறி, முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என காவல்துறை நீதிமன்றத்தில் வலியுறுத்தியிருக்கிறது.

யுபிஎஸ்சி தேர்வுகள் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையை இழக்கச் செய்யும் வகையில் பூஜா கேத்கரின் நடவடிக்கைகள் இருந்தையும் காவல்துறை சுட்டிக்காட்டியிருக்கிறது.

இதையடுத்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 29 வரை ஒத்திவைத்து, அதுவரை பூஜா கேத்கரை கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.