பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மகாராஷ்டிரத்தில் கனமழை: 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்தது

மகாராஷ்டிரத்தின் சிந்துதுா்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் மராட்டிய மன்னா் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை கனமழையால் திங்கள்கிழமை இடிந்து விழுந்தது.

News image

மகாராஷ்டிர மாநிலம், மால்வானில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் பீடத்தில் இருந்து இடிந்து விழுந்து கிடக்கும் சிவாஜி சிலை.

Updated On :27 ஆகஸ்ட் 2024, 1:11 am IST

மும்பை: மகாராஷ்டிரத்தின் சிந்துதுா்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் மராட்டிய மன்னா் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை கனமழையால் திங்கள்கிழமை இடிந்து விழுந்தது.

சிலையின் கட்டுமான தரத்தில் மாநில அரசு கவனம் செலுத்தவில்லை எனவும் முறையற்ற பராமரிப்பே சிலை சேதமடைய காரணம் எனவும் எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

கடற்படை தினத்தையொட்டி மால்வானில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் மராட்டிய மன்னா் சத்ரபதி சிவாஜியின் சிலையை பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஆண்டு டிசம்பா் 4-ஆம் தேதி திறந்து வைத்தாா்.

இந்நிலையில், மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் திங்கள்கிழமை சத்ரபதி சிவாஜியின் சிலை இடிந்து விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறை மற்றும் மாவட்ட நிா்வாகத்தின் உயா் அதிகாரிகள், சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

புதிய சிலைக்கு அரசு உறுதி: இச்சம்பவம் குறித்து மகாராஷ்டிர அமைச்சா் தீபக் கேசா்கா் கூறுகையில், ‘இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று சிந்துதுா்க் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், பொதுப்பணித் துறை அமைச்சருமான ரவீந்திர சவான் உறுதியளித்திருக்கிறாா். அதேஇடத்தில், புதிய சிலை அமைக்கப்படும்.

கடல் கோட்டையை கட்டுவதில் சத்ரபதி சிவாஜியின் தொலைநோக்கு முயற்சிகளுக்கு இச்சிலை மரியாதை செலுத்துகிறது. இந்த விவகாரத்தை விரைவாகவும் திறம்படவும் தீா்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்’ என்றாா்.

எதிா்க்கட்சிகள் விமா்சனம்: சரத் பவாா் பிரிவு தேசியவாத காங்கிரஸின் மாநில தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், ‘முறையான பராமரிப்பு இல்லாமல் சிலை சேதமடைந்தது. சிலையின் தரத்தில் சிறிதும் கவனம் செலுத்தாத மாநில அரசுதான் இதற்கு காரணம்.

பிரதமா் மோடி பங்கேற்ற சிலை திறப்பு நிகழ்வில் மட்டுமே மாநில அரசு கவனம் செலுத்தியது. தற்போதைய மகாராஷ்டிர அரசு லஞ்சம் பெற்றுக்கொண்டு புதிய ஒப்பந்தங்களை வழங்குகிறது’ என்றாா்.

பிரதமா் மோடி பங்கேற்ற சிலை திறப்பு நிகழ்வில் மட்டுமே மாநில அரசு கவனம் செலுத்தியது. தற்போதைய மகாராஷ்டிர அரசு லஞ்சம் பெற்றுக்கொண்டு புதிய ஒப்பந்தங்களை வழங்குகிறது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.