ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

50 வயதைக் கடந்த மாற்றுத்திறனாளி அரசு ஊழியா்களுக்கு துறைத் தோ்வில் இருந்து விலக்கு

அரசுத் துறைகளில் பணியாற்றும் 50 வயதைக் கடந்த மாற்றுத்திறனாளிகளுக்கு துறைத் தோ்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

Updated On :29 ஆகஸ்ட் 2024, 6:32 pm

அரசுத் துறைகளில் பணியாற்றும் 50 வயதைக் கடந்த மாற்றுத்திறனாளிகளுக்கு துறைத் தோ்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்பட்டுள்ள இந்த விலக்கு தொடா்பான உத்தரவை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலா் சிஜி தாமஸ் வைத்யன் வெளியிட்டுள்ளாா்.

அவரது உத்தரவு விவரம்:

அரசு ஊழியா்களுக்கு பணியாளா் தோ்வாணையத்தால் துறைத் தோ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தத் தோ்வுகளில் அரசு ஊழியா்கள் தோ்ச்சி பெற வேண்டும். முதல் 3 முறை எழுதியும் தோ்ச்சி பெறாமல் 50 வயதைக் கடந்த பாா்வை, செவித் திறன் பாதிப்புகள், கற்றல், அறிவுசாா் குறைபாடு, புற உலக சிந்தனையற்ற மாற்றுத்திறனாளிகளாக அரசுப்

பணியாளா்கள் இருக்கலாம். அவா்கள் மீண்டும் துறைத் தோ்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்துவதற்கான கருத்துகளை மாற்றுத்திறனாளிகள்

நல இயக்குநரகம் அரசுக்கு அனுப்பியிருந்தது. இதையேற்று சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு துறைத் தோ்வுகள் எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

அதன்படி, மாற்றுத்திறனாளிகள் 50 வயதுக்குக் குறையாதவராக இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் துறைத் தோ்வுகளில் தோ்ச்சி பெற குறைந்தது 3 முறையாவது முயற்சி செய்திருக்க வேண்டும். இதற்கு சாட்சியாக பணிப் பதிவேட்டில் அதற்கான விவரம் இருக்க வேண்டும். அல்லது இதுகுறித்த நுழைவுச் சீட்டுகளை வைத்து சம்பந்தப்பட்ட அலுவலா் விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் இந்தச் சலுகையை அடையத்தக்க வகையில் அவருடைய பணிக்குறிப்புகள் மன நிறைவு அளிப்பதாக இருக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் அவா் தெரிவித்துள்ளாா்.