பாதிக்கப்பட்ட முதல் குழந்தை மற்றும் அவரது பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில், இரண்டு வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12ஆம் தேதி கழிப்பறையில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவரது பெற்றோர் பள்ளியில் முறையிட்டும் பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 13ஆம் தேதி மற்றொரு மாணவியை துப்புரவு தொழிலாளி அக்சய் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த போதுதான், அவர்களது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து மிகப்பெரிய அளவில் ரயில் மறியல் நடத்தப்பட்டதால், இது நாடு முழுவதும் தெரிய வந்தது.