

தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் காலை 7.27 மணியளவில் 5.3 ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. தெலங்கானாவில் ஏற்பட்ட நில அதிர்வு ஹைதராபாத்திலும் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் உயிர்சேதமோ அல்லது பொருள்சேதமோ எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் குடியிருப்பாளர்கள் விழிப்புடன் இருக்கவும், நில அதிர்வின் போது நெரிசலான, பாதுகாப்பற்ற கட்டடங்களில் இருந்து தொலைவில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோன்று நவம்பர் 30 ஆம் தேதி அஸ்ஸாமின் கர்பி அங்லாங் பகுதியில் 2.9 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டது. நில அதிர்வு அதிகாலை 2.40 மணியளவில் பதிவாகியிருந்தது.
அதற்கு 2 நாள்கள் முன்னதாக, நவம்பர் 28 அன்று ஜம்மு காஷ்மீரில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, ஆனால் உயிர் சேதம் அல்லது பொருள்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானில் 36.49 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், கிழக்கே 71.27 டிகிரி தீர்க்கரேகையிலும், 165 கி.மீ ஆழத்தில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வங்கதேசத்தில் நிலநடுக்கம்: கொல்கத்தாவில் கடும் நில அதிா்வு

வங்கதேசத்தில் 5.4 ரிக்டர் நிலநடுக்கம்! அதிர்வுகளில் சிக்கிய கொல்கத்தா!

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.9 ஆகப் பதிவு

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆகப் பதிவு
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

