நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கடும் சரிவிலிருந்து 3 காசுகள் உயர்ந்த ரூபாய் மதிப்பு!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 84.72 காசுகளாக நிர்ணயம்.

News image

இந்திய ரூபாய் மதிப்பு விவரம் - PTI

Updated On :5 டிசம்பர் 2024, 6:20 pm IST

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவிலிருந்து 3 காசுகள் உயர்ந்து ரூ. 84.72 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் நேற்று 8 காசுகள் சரிந்து ரூ. 84.75 ஆக வணிகமானது.

உள்ளூர் வணிகம் மற்றும் பங்குகளை வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வம் உள்ளிட்டவை காரணமாக டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சற்று உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

வணிக நேரத் தொடக்கத்தில் வங்கிகளுக்கு இடையிலான நாணய பரிமாற்றத்தில் இந்திய ரூபாய் மதிப்பு 84.72 காசுகளுடன் தொடங்கியது. பின்னர் 2 காசுகள் உயர்ந்து 84.70 காசுகளாக வணிகமானது. வணிகத்தில் நிலவிய ஏற்ற இறக்கத்தால் ரூ. 84.74 காசுகள் வரை சரிந்தது.

பங்குச் சந்தை வணிகம்

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 809.53 புள்ளிகள் உயர்ந்து 81,765.86 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 1 சதவீதம் உயர்வாகும்.

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 240.95 புள்ளிகள் உயர்ந்து 24,708.40 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.98 சதவீதம் உயர்வாகும்.

வணிக நேர முடிவில் சென்செக்ஸ் 809 புள்ளிகளும் நிஃப்டி 240 புள்ளிகளும் உயர்வுடன் இருந்தன. மும்பை பங்குச் சந்தையில் ரூ. 459.16 கோடிக்கு வணிகம் நடைபெற்றது. அதிகபட்சமாக ஐடி துறை பங்குகள் 1.95% உயர்ந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.