காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

வாட்ஸ்ஆப்பில் புதிய அம்சங்கள்!

வாட்ஸ்ஆப்பில் சாட் செய்யும்போது ‘டைப்பிங் இண்டிகேட்டர்’ வசதி...

News image

ANI

Updated On :8 டிசம்பர் 2024, 4:02 pm IST

வாட்ஸ்ஆப்பில் 3 புதிய அம்சங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன. வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோரின் வசதிக்காக சாட் செய்யும்போது கூடுதல் அம்சமாக ‘டைப்பிங் இண்டிகேட்டர்’ என்ற வசதியை மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ்ஆப்பில் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளது.

வாட்ஸ்ஆப் குரூப்கள் மற்றும் தனி நபர்கள் இடையேயான உரையாடல்களின்போது, எதிர்முனையில் இருக்கும் நபர் டைப் செய்து கொண்டிருந்தால் அதை அறிந்துகொள்ளும் விதமாக, டைப் செய்யும் நபரின் முகப்பு படம் “ ... ” என்ற அடையாளத்துடன் காண்பிக்கப்படும். இதன்மூலம் வாட்ஸ்ஆப் குழுக்களில் டைப் செய்யும் நபரை எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம்.

வாட்ஸ் ஆப்பில் டிராஃப்ட் மெசேஜ் என்கிற வசதியும் வர உள்ளது. இதன் மூலம், ஒருவர் டைப் செய்து முடித்தும், அதை உடனடியாக அனுப்பாமல் பின்னர் அனுப்ப வசதியாக சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

வாய்ஸ் நோட் டிரான்ஸ்கிரிப்சன் வசதியும் வாட்ஸ்ஆப்பில் வந்துள்ளது. இதன்மூலம், வாட்ஸ் ஆப்பில் ஒலி வடிவில் அனுப்பப்படும் மெசேஜ்களை, எழுத்து வடிவில் மாற்றி பயனர்கள் படித்துக்கொள்ள முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.