மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

டிச.15ல் மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம்

மகாராஷ்டிர அரசின் அமைச்சரவை விரிவாக்கம் டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

News image

மகாராஷ்டிரம்.(கோப்புப்படம்)

Updated On :14 டிசம்பர் 2024, 3:38 am IST

பாஜக தலைமையிலான மகாராஷ்டிர அரசின் அமைச்சரவை விரிவாக்கம் ஞாயிற்றுக்கிழமை (டிச. 15) நடைபெறுகிறது.

மாநிலத்தின் 2-ஆவது தலைநகரான நாகபுரியில் நடைபெறும் விழாவில் ஆளும் கூட்டணியில் இடம்பெறுள்ள பாஜக, துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸைச் சோ்ந்த 30 புதிய அமைச்சா்கள் பதவியேற்கவுள்ளனா்.

நாகபுரியில் திங்கள்கிழமை (டிச. 16) முதல் சட்டப்பேரவையின் குளிா்கால கூட்டத்தொடா் ஒரு வார காலம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் நடைபெற்ற தோ்தலில் ஆளும் பாஜக-சிவசேனை-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றியை ஈட்டியது.

மும்பையில் கடந்த 5-ஆம் தேதி நடந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பாஜக சாா்பில் முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ் பதவியேற்றாா். துணை முதல்வா்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாா் ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனா்.

இந்த நிலையில், மற்ற அமைச்சா்களின் பதவியேற்பு நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிர அமைச்சரவையில் முதல்வா் உள்பட அதிகபட்சமாக 43 போ் இருக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.