மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

உ.பி.: சம்பலில் 45 ஆண்டுகளுக்குப்பின் திறக்கப்பட்ட கோயில்!

1978-ஆம் ஆண்டு மூடப்பட்ட சிவாலயம் இப்போது திறக்கப்பட்டுள்ளது..

News image

PTI

Updated On :14 டிசம்பர் 2024, 10:12 am

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்ட கோயிலொன்று இன்று(டிச. 14) திறக்கப்பட்டுள்ளது.

கக்கு சாஅராய் பகுதியிலுள்ள இந்த சிவாலயம், கடந்த 1978-ஆம் ஆண்டுக்குப்பின் திறக்கப்படாமல் பராமரிப்பின்றி மூடப்பட்ட நிலையில் இருந்தது. காலப்போக்கில் கோயிலைச் சுற்றி மக்கள் குடியிருப்புகளைக் கட்டி வசிக்கத் தொடங்கியதால், கோயில் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயுள்ளது. இந்த நிலையில், சுமார் 45 ஆண்டுகளுக்குப்பின் இப்போது திறக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

பல ஆண்டுகளுக்குப்பின் கோயில் திறக்கப்பட்டிருப்பது குறித்து காவல்துறை உயரதிகாரியொருவர் கூறியதாவது, “கோயில் அமைந்திருக்கும் இந்த பகுதி சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, காவல்துறையால் இந்த பகுதியில் சோதனை நடத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, சிதிலமடைந்த நிலையில் கோயிலிருப்பதை கண்டறிந்தோம்.

இதனையடுத்து கோயிலைத் திறந்து உள்ளே சென்று ஆய்வு செய்து வருகிறோம். கோயில் இருக்கும் இடத்திலுள்ள ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்ற நடவடடிக்கைகள் எடுக்கப்படும். கோயிலின் அருகமையிலுள்ள கிணறு ஒன்றும் பாழடைந்த நிலையில் உள்ளது. இந்த பகுதியில் புனரமைப்பு பணிகளுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

முன்னதாக, கடந்த நவம்பர் மாதம் 24-ஆம் தேதியன்று இதே சம்பல் மாவட்டத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான ஷாஹி ஜாமா மஸ்ஜித் மசூதியில் நீதிமன்றம் ஆய்வு நடத்த உத்தரவிட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

மசூதியில் ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து மசூதி அருகே ஏராளமான போராட்டக்காரர்கள் திரண்டதால் அப்பகுதியில் வன்முறை மூண்டது. கல்வீச்சு சம்பவங்களும் அரங்கேறின. இதில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமுற்றனர்.

இச்சம்பவம் குறித்து விசாரிக்க நீதிமன்றத்தால் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பல் வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.