FOLLOW US

ON GOOGLE DISCOVER

தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

ரூ.4,200 கோடியில் எக்ஸ்பிரஸ்வே.. 12 நாள்களில் வெடிப்பு! நேற்றோ..

ரூ.4,200 கோடியில் எக்ஸ்பிரஸ்வே சாலை திறக்கப்பட்ட 12 நாள்களில் பாலம் பாலமாக வெடித்திருப்பது பற்றி..

News image

எக்ஸ்பிரஸ்வே சாலை - From video grab

Updated On :27 ஜூலை 2026, 3:58 pm IST

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 13ஆம் தேதி முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரியால் திறந்து வைக்கப்பட்ட ரூ.4,200 கோடியில் உருவாக்கப்பட்ட எக்ஸ்பிரஸ்வே சாலையில் மழை பெய்ததால், வெடிப்பு ஏற்பட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

கான்பூர் - லக்னௌ இடையே அமைக்கப்பட்ட இந்த எக்ஸ்பிரஸ் வே-யில் பழுதான சாலை நேற்று தோண்டி அகற்றப்பட்டு புதிய சாலை போடப்பட்டுள்ளது.

மழை பெய்த நிலையில், வாகனங்கள் சென்று வந்ததால், சாலைகளில் மேடுபள்ளம் ஏற்பட்டு, மேடான பகுதிகளில் பெரிய பெரிய விரிசல்கள் விழுந்திருப்பது, புதிய சாலைதானே பறக்கலாம் என அவ்வழியில் வருவோருக்கு நிச்சயம் ஏமாற்றத்தைக் கொடுக்கலாம்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, மத்திய அமைச்சர்கள், முதல்வர் என பெரிய தலைவர்கள் பங்கேற்று சாலையை திறந்து வைத்தனர். ஆனால், வெறும் இரண்டு வாரங்கள்தான், அந்த சாலையின் அடையாளமே இன்று வேறாகி நிற்கிறது.

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மதுசூதன் யாதவ், எக்ஸ்பிரஸ்வேயின் விடியோ ஒன்றை பதிவிட்டு, கோராரி கிராமம் அருகே, 5 முதல் 7 மீட்டர் வரை சாலை சேதமடைந்திருக்கிறது.

மழைக்குப் பிறகு சாலை எப்படி மோசமடைந்திருக்கிறது என்பதையும் அவர் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார். இது பரவலாக அதிருப்தியையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.

எக்ஸ்பிரஸ் வே சாலையின் உறுதித்தன்மை கேள்விக்குறியாக்கியிருக்கிறது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.