வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

மத்திய அரசின் காப்பீடு திட்டத்தில் 21 கோடி மக்கள் பலன்: நிதித் துறை

மத்திய அரசின் ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் 21 கோடி மக்கள் பலனடைந்துள்ளதாக நிதித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :15 டிசம்பர் 2024, 9:40 pm IST

மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் 21 கோடி மக்கள் பலனடைந்துள்ளதாக நிதித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம், காப்பீடு செய்த நபர் திடீரென இறந்தால், அரசு அவரது குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவியாக வழங்குகிறது. இதற்காக மிகக் குறைந்த அளவிலான தொகையே ஆண்டுக்கு ஒருமுறை பெறப்படுகிறது.

18 முதல் 50 வயது வரை உள்ள அனைவரும் வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தின் மூலம் இந்தத் திட்டத்தில் சேரலாம்.

நிதித் துறை அமைச்சகம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா ஆயுள் காப்பீடு திட்டமானது, இதுவரை 21 கோடி மக்களுக்கு அவர்கள் குடும்பத்தின் நிச்சயமற்ற நிதி காலத்திற்கு உதவும் வகையில் ரூ.2 லட்சம் கொடுத்துள்ளது. அக்டோபர் 20ஆம் தேதி வரை இத்திட்டத்தில் 21.67 கோடி பேர் இணைந்துள்ளனர்.

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்ற விபத்து காப்பீடு திட்டத்தில் 47.59 கோடி மக்கள் இணைந்துள்ளனர். இந்தத் திட்டத்தில் விபத்தில் சிக்கியவர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதில், நவ. 20வரை 1.93 லட்சம் பேர் தொகையைப் பெற்று பலன் அடைந்துள்ளனர்.

மக்கள் நிதித் திட்டத்தின் (பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா) மூலம் 54 கோடி மக்கள் பலன் அடைந்துள்ளனர். வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு இருக்கும் வகையில் கடந்த 2014ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது.

தற்போது ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்களில் 55.6% பெண்கள் (29.56 கோடி). இதில், 66.6% (35.37 கோடி) ஜன் தன் வங்கிக் கணக்குகள் கிராமப் புறங்களில் உருவாக்கப்பட்டுள்ளன என நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.