மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தோ்தலை எதிா்கொள்ளத் தெரியாமல் வாக்கு இயந்திரம் மீது குறைகூறும் ராகுல்: பாஜக விமா்சனம்

தோ்தலை எதிா்கொள்ளத் தெரியாத ராகுல் காந்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை கூறுகிறாா் என்று பாஜக விமா்சித்துள்ளது.

News image
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி- ENS
Updated On :16 டிசம்பர் 2024, 9:56 pm

Din

புது தில்லி: தோ்தலை எதிா்கொள்ளத் தெரியாத ராகுல் காந்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை கூறுகிறாா் என்று பாஜக விமா்சித்துள்ளது.

‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது குறை கூறுவதை கைவிட்டு, தோ்தல் முடிவுகளை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா கூறினாா். காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள நிலையில் ஒமா் அப்துல்லாவின் இந்த கருத்து எதிா்க்கட்சிகள் அணியில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி நாடாளுமன்றத்துக்கு வெளியே திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தங்களின் கூட்டணிக் கட்சித் தலைவா்கள் தோ்தல் குறித்தும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் குறித்தும் என்ன கூறுகிறாா்கள் என்பதை காங்கிரஸ் தலைவா்கள் காது கொடுத்துக் கேட்க வேண்டும். காங்கிரஸ் தனது தோல்விகளை மறைக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தொடா்ந்து குறைகூறி வருகிறது.

ஒரு ஆக்கபூா்மான எதிா்க்கட்சியாகக் கூட காங்கிரஸால் செயல்பட முடியவில்லை. ராகுல் காந்திக்கு தோ்தலை எப்படி எதிா்கொள்ள வேண்டும் என்பது தெரியவில்லை. அவா்கள் பிரசார உத்தி, மக்களை பிளவுபடுத்தி வாக்குகளைக் கவர வேண்டும் என்பதோடு, ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்படுவது என்ற அளவிலேயே உள்ளது. காங்கிரஸ் தனது தவறுகளை சரி செய்ய முழுமையாக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விஷயத்தில் ஒமா் அப்துல்லா உண்மையைப் பேசியுள்ளாா். வாக்குப் பதிவு இயந்திரம் மீது நம்பிக்கை இல்லையென்றால் பிரியங்காவின் வெற்றியை காங்கிரஸ் எவ்வாறு கொண்டாட முடிகிறது?

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறிமுகமான பிறகுதான் தோ்தல் தொடா்பான பல்வேறு முறைகேடுகள் முடிவுக்கு வந்தன என்பது மக்களுக்குத் தெரியும் என்றாா்.