தில்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள் புதன்கிழமை பிற்பகலில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் முழுவதும் நாளை பகல் 12 முதல் 3 மணி வரை அனைத்து ரயில்களையும் விவசாயிகள் நிறுத்த வேண்டும் என்று விவசாய சங்கத் தலைவர் சர்வன் சிங் பாந்தர் கேட்டுக் கொண்டுள்ளார்.
வேளாண் பயிா்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட உத்தரவாதம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
பஞ்சாப்-ஹரியாணா எல்லையான ஷம்புவிலிருந்து டிச. 14ஆம் தேதி மூன்றாவது முறையாக சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தில்லி நோக்கி நடைபயணத்தை மேற்கொண்டனர். அப்போது விவசாயிகளை தடுத்து நிறுத்திய ஹரியாணா காவல்துறை, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி அவர்களை கலைந்து போகச் செய்தனர். இதில் காயமடைந்த விவசாயிகள் டிராக்டரில் மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனிடையே, 20 நாள்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பஞ்சாப் விவசாயிகள் சங்கத் தலைவா் ஜக்ஜித் சிங் தலேவா உடல்நிலை மோசமடைந்துள்ளார்.
இந்த நிலையில், ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்த சர்வன் சிங் பேசியதாவது:
“நேற்று வாகனப் பேரணிக்கு ஆதரவளித்த அனைத்து விவசாயிகளுக்கும் நன்றி. உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜக்ஜித் சிங் தலேவாவின் உடல்நிலை மோசமாக உள்ளது. அவருக்கு ஏதேனும் நேரிட்டால் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
மோடி அரசு பிடிவாதமாக இருக்கிறது. எங்களின் கோரிக்கைகளை நசுக்குவதில் வெற்றி பெறுவார்கள் என்று நினைக்கிறார்கள். ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் சேர்ந்து விவசாயிகளின் குரலை நசுக்குகிறார்கள்.
நாளை பகல் 12 முதல் 3 மணி வரை ரயில் மறியல் போராட்டத்துக்கு பஞ்சாப் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த முறை கண்டிப்பாக கோப்பையை வெல்வோம்: ஷஷாங் சிங்

பஞ்சாப் அரசு அதிகாரி தற்கொலை! எம்.பி.க்கள் பரிந்துரைத்தால் சிபிஐ விசாரணை: அமித் ஷா

பஞ்சாப்: அரசு அதிகாரி தற்கொலை! பதவி விலகிய அமைச்சா் மீது வழக்குப்பதிவு!

போராட்டத்தில் ரயில் முன் பாய்ந்த இளைஞா்: நேரில் நலம் விசாரித்த முதல்வா்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


