தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

வறுமை, வேலையின்மையால் வாடும் மக்களுக்கான திட்டங்களைத் தொடங்க வேண்டும்: மாயாவதி

வறுமை, வேலையின்மை மற்றும் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் சில திட்டங்களை உத்தரப் பிரதேச அரசு தொடங்க வேண்டும்

News image
Updated On :18 டிசம்பர் 2024, 11:17 am IST

லக்னௌ: வறுமை, வேலையின்மை மற்றும் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் சில திட்டங்களை உத்தரப் பிரதேச அரசு தொடங்க வேண்டும் என்று புதன்கிழமை உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் தலைவருமான மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் வறுமை, வேலையின்மை மற்றும் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன் கருதி சில திட்டங்களை உத்தரப் பிரதேச அரசு தொடங்க வேண்டும்.

மேலும் தற்போது மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே இதற்கான அறிவிப்புகளை வெளியிட வேண்டும், அவ்வாறு அறிவிக்கப்பட்டால் அது அவர்களுக்கு ஓரளவுக்கு நிம்மதி மற்றும் நிவாரணம் அளிப்பதாக இருக்கும். இது பகுஜன் சமாஜ் கட்சியின் சிறப்பு வேண்டுகோள் என அவர் கூறியுள்ளார்.

403 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.