மிசோரம் மாநிலத்தின் சிறையிலிருந்து இரண்டு மியான்மர் நாட்டு பெண் கைதிகள் தப்பியோடியுள்ளனர்.
கிழக்கு மிசோரமில், மியான்மர் நாட்டுடனான இந்திய எல்லை அமைந்திருக்கும் சம்பாய் மாவட்டத்திலுள்ள சிறையிலிருந்து மியான்மர் நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண் கைதிகள் தப்பியோடியுள்ளதாக இன்று (டிச.19) அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட மியான்மர் நாட்டைச் சேர்ந்த வன்சுயேனி (எ) சுயினுஃபேலி (36) மற்றும் லால்சான்மாவி (44) ஆகிய இருவரும் தகர ஓடுகளினால் செய்யப்பட்ட சிறைக் கழிவறையிலிருந்து தப்பியதாக கூறப்படுகின்றது.
முன்னதாக 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ந்தேதி அய்சுவாலிலுள்ள பெண்களுக்கான மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த லால்சான்மாவி அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
பின்னர், ஹெராயின் வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்ட போது அவர்கள் அந்த போதைப்பொருளை தப்பியோடிய லால்சான்மாவியிடம் வாங்கியதாக கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, இந்த வருடம் (2024) மே 11 அன்று அவர் காவல்துறையால் கைதுச் செய்யப்பட்டிருந்தார்.
தற்போது அவர் மீண்டும் வேறொரு பெண் கூட்டாளியுடன் தப்பியோடியது குறித்து சம்பாய் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறைக் கைதிகள் எழுதிய புத்தகங்களை வெளியிடும் பணியில் எழுதுக இயக்கம்

சிறையில் காவலரைத் தாக்கிய கைதிகள் இருவா் மீது வழக்கு

கோவை மத்திய சிறையில் காவலர் மீது கைதிகள் தாக்குதல்

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.9 ஆகப் பதிவு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



