சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

இந்திய சிறையிலிருந்து 2 மியான்மர் பெண் கைதிகள் தப்பியோட்டம்!

மிசோரம் மாநிலத்தின் சிறையிலிருந்து 2 மியான்மர் நாட்டுப் பெண் கைதிகள் தப்பியோடியதைப் பற்றி..

News image

கோப்புப்படம்

Updated On :19 டிசம்பர் 2024, 1:23 pm IST

மிசோரம் மாநிலத்தின் சிறையிலிருந்து இரண்டு மியான்மர் நாட்டு பெண் கைதிகள் தப்பியோடியுள்ளனர்.

கிழக்கு மிசோரமில், மியான்மர் நாட்டுடனான இந்திய எல்லை அமைந்திருக்கும் சம்பாய் மாவட்டத்திலுள்ள சிறையிலிருந்து மியான்மர் நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண் கைதிகள் தப்பியோடியுள்ளதாக இன்று (டிச.19) அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட மியான்மர் நாட்டைச் சேர்ந்த வன்சுயேனி (எ) சுயினுஃபேலி (36) மற்றும் லால்சான்மாவி (44) ஆகிய இருவரும் தகர ஓடுகளினால் செய்யப்பட்ட சிறைக் கழிவறையிலிருந்து தப்பியதாக கூறப்படுகின்றது.

முன்னதாக 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ந்தேதி அய்சுவாலிலுள்ள பெண்களுக்கான மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த லால்சான்மாவி அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

பின்னர், ஹெராயின் வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்ட போது அவர்கள் அந்த போதைப்பொருளை தப்பியோடிய லால்சான்மாவியிடம் வாங்கியதாக கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, இந்த வருடம் (2024) மே 11 அன்று அவர் காவல்துறையால் கைதுச் செய்யப்பட்டிருந்தார்.

தற்போது அவர் மீண்டும் வேறொரு பெண் கூட்டாளியுடன் தப்பியோடியது குறித்து சம்பாய் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.