மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஒடிசாவில் 18.5 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

ஒடிசா கிராமத்தில் இருந்து 18.5 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளது.

News image

மலைப்பாம்பு(கோப்புப்படம்)

Updated On :20 டிசம்பர் 2024, 4:33 pm

ஒடிசா கிராமத்தில் இருந்து 18.5 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளது.

ஒடிசாவின் கேந்தரபாரா மாவட்டத்தில் உள்ள பிதர்கனிகா தேசிய பூங்கா அருகே உள்ள ராஜேந்திரநாராயண்பூர் கிராமத்தில் 18.5 அடி நீளமுள்ள இந்திய ராக் வகை மலைப்பாம்பு வெள்ளிக்கிழமை வழிதவறி வந்துள்ளது.

பாம்பைக் கண்ட அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, வனத்துறையினர் விரைந்து வந்து மலைப்பாம்பை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அதனை வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர்.

மலைப்பாம்புக்கு சில காயங்கள் ஏற்பட்டதால், தற்போது கால்நடை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முழுமையாக குணமடைந்ததும் மலைப் பாம்பு மீண்டும் காட்டுக்குள் விடப்படும் என வனத்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.

மலைப்பாம்புகள் பொதுவாக மனிதர்களைத் தாக்குவதில்லை என்று வன அதிகாரிகள் அப்போது தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.