மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

ஒடிசாவில் 18.5 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

ஒடிசா கிராமத்தில் இருந்து 18.5 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளது.

News image

மலைப்பாம்பு(கோப்புப்படம்)

Updated On :20 டிசம்பர் 2024, 10:03 pm IST

ஒடிசா கிராமத்தில் இருந்து 18.5 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளது.

ஒடிசாவின் கேந்தரபாரா மாவட்டத்தில் உள்ள பிதர்கனிகா தேசிய பூங்கா அருகே உள்ள ராஜேந்திரநாராயண்பூர் கிராமத்தில் 18.5 அடி நீளமுள்ள இந்திய ராக் வகை மலைப்பாம்பு வெள்ளிக்கிழமை வழிதவறி வந்துள்ளது.

பாம்பைக் கண்ட அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, வனத்துறையினர் விரைந்து வந்து மலைப்பாம்பை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அதனை வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர்.

மலைப்பாம்புக்கு சில காயங்கள் ஏற்பட்டதால், தற்போது கால்நடை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முழுமையாக குணமடைந்ததும் மலைப் பாம்பு மீண்டும் காட்டுக்குள் விடப்படும் என வனத்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.

மலைப்பாம்புகள் பொதுவாக மனிதர்களைத் தாக்குவதில்லை என்று வன அதிகாரிகள் அப்போது தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.