ஒடிசா கிராமத்தில் இருந்து 18.5 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளது.
ஒடிசாவின் கேந்தரபாரா மாவட்டத்தில் உள்ள பிதர்கனிகா தேசிய பூங்கா அருகே உள்ள ராஜேந்திரநாராயண்பூர் கிராமத்தில் 18.5 அடி நீளமுள்ள இந்திய ராக் வகை மலைப்பாம்பு வெள்ளிக்கிழமை வழிதவறி வந்துள்ளது.
பாம்பைக் கண்ட அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, வனத்துறையினர் விரைந்து வந்து மலைப்பாம்பை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அதனை வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர்.
மலைப்பாம்புக்கு சில காயங்கள் ஏற்பட்டதால், தற்போது கால்நடை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முழுமையாக குணமடைந்ததும் மலைப் பாம்பு மீண்டும் காட்டுக்குள் விடப்படும் என வனத்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.
மலைப்பாம்புகள் பொதுவாக மனிதர்களைத் தாக்குவதில்லை என்று வன அதிகாரிகள் அப்போது தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










