பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பஞ்சாப்: அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து; 5 பேரை மீட்கும் பணி தீவிரம்

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டடம் சனிக்கிழமை இடிந்து விபத்துக்குள்ளானது.

News image
மொஹாலியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்த பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்ட மீட்புப் படையினா்.
Updated On :21 டிசம்பர் 2024, 9:03 pm

Din

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டடம் சனிக்கிழமை இடிந்து விபத்துக்குள்ளானது. அதில் சிக்கியுள்ள 5 பேரை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கட்டடத்தில் சிக்கியிருந்த பெண் ஒருவா் மீட்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மொஹாலிக்கு அருகேயுள்ள சோஹானா பகுதியில் கட்டப்பட்டு வந்த கட்டடம் திடீரென இடிந்து விபத்துக்குள்ளான செய்தி கேட்டு துயரமடைந்தேன். இந்த விபத்தில் சிக்கியுள்ளவா்களை மீட்கும் பணியில் பல்வேறு மீட்புக் குழுக்கள் ஈடுபடுபட்டுள்ளன. இந்தச் சம்பவத்துக்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என குறிப்பிட்டாா்.

அருகில் உள்ள நிலத்தை தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது கட்டடம் இடிந்து விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவா்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறை, தேசிய பேரிடா் மீட்புப் படை, காவல் துறை, மருத்துவா்கள் குழு ஆகியவை தீவிரமாக ஈடுபட்டுள்ளன.