அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மத்திய பட்ஜெட்: 2025 பிப். 1, சனிக்கிழமை பங்குச் சந்தை செயல்படும்!

2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிவிக்கப்படும் நாளான சனிக்கிழமை பங்குச் சந்தை செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :23 டிசம்பர் 2024, 1:11 pm

DIN

2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிவிக்கப்படும் நாளான சனிக்கிழமை பங்குச் சந்தை செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி (சனிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. வழக்கமாக வார இறுதி நாள்கான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச் சந்தை செயல்படாது. திங்கள் - வெள்ளி வரையிலான வார நாள்களில் மட்டுமே செயல்படும்.

இதனால், மத்திய பட்ஜெட் அறிவிப்புகளுக்கு ஏற்ப பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முடியாத நிலை முதலீட்டாளர்களிடையே நிலவி வந்தது.

இந்நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் 2025 பிப்ரவரி 1 ஆம் தேதியன்று வர்த்தகத்திற்காக பங்குச் சந்தை திறந்திருக்கும் என்று தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ.) மற்றும் மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ.) அறிவித்துள்ளன.

இதற்கு முன்பு 2020, 2015 ஆகிய ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகளுக்கும் வார இறுதி நாளையும் பொருட்படுத்தாது பங்குச் சந்தை இயங்கியது குறிப்பிடத்தக்கது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 பிப்ரவரி 1 -ல் தனது 8 வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.