சுசூகி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் காலமானார்!

சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி காலமானார். அவருக்கு வயது 94.
சுசூகி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் காலமானார்!
Published on
Updated on
1 min read

சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி காலமானார். அவருக்கு வயது 94.

லிம்போமா என்னும் ஒருவகை ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், டிச. 25ஆம் தேதி உயிர் பிரிந்ததாக, ஜப்பானின் சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் இன்று (டிச. 27) தெரிவித்துள்ளது.

ஒசாமு சுசூகியின் தலைமையின் கீழ், அந்நிறுவனம் உலக சந்தையில் விரிவடைந்தது. சுசூகி நிறுவனம் குறிப்பாக மினி கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு பெயர் பெற்றது.

1982 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கத்துடன் ஒரு கூட்டு முயற்சியை உருவாக்கிய சுசூகி, மாருதி உத்யோக்கை உருவாக்கினார்.

இந்த நிறுவனம், மாருதி 800 என்ற சிறிய காரை அறிமுகப்படுத்தியது. அக்காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே, இந்த வகை கார் இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால், சுசூகிக்கு வலுவான நிலையை அடைந்தது.

இந்தியா மட்டுமின்றி உலக அளவில் சுசூகி நிறுவனம் பிரபலமடைய ஒசாமு காரணமாக இருந்தார்.

சுசூகி நிறுவனத்தில் அதிக ஆண்டுகளுக்கு தலைவராக இருந்த ஒசாமு, தனது நிறுவனத்தின் சிறிய ரக கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு உலகம் முழுவதும் பெரும் சந்தையை உருவாக்கினார்.

1930 ஜனவரி 30 ஆம் தேதி ஜப்பானின் ஜெரோவில் பிறந்த ஒசாமு, வங்கியாளராகப் பணிபுரிந்தார். 1958 ஆம் ஆண்டு சுசூகி குடும்பத்தின் மகள் ஷோகோ சுசூகியை மணந்தார். இதனால் சுசூகி என்ற குடும்பப் பெயரைப் பெற்றார். அதே ஆண்டில் சுசுகி நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com