பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

புத்தாண்டை கசப்பாக்கிய ஐஆர்சிடிசி: ஒரே மாதத்தில் 3-வது முறை முடங்கியது!

ஐஆர்சிடிசி வலைதளம் செயலிழந்தது பற்றி...

News image

தட்கல் நேரத்தில் செயலிழந்த ஐஆர்சிடிசி வலைதளம் - படம்: எக்ஸ்

Updated On :31 டிசம்பர் 2024, 12:09 pm IST

தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் நேரத்தில் செவ்வாய்க்கிழமை காலை நீண்ட நேரமாக ஐஆர்சிடிசி செயலி மற்றும் இணையதளம் செயலிழந்து காணப்பட்டதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாதத்தில் மட்டும் மூன்றாவது முறையாக தட்கல் முன்பதிவு நேரத்தில் ஐஆர்சிடிசி தளம் செயலிழந்துள்ளது.

அவசரகால பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக, ரயில் புறப்படுவதற்கு முந்தைய நாள், தட்கல் முறையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் முறை இந்திய ரயில்வேவில் உள்ளது.

இந்தப் பயணச்சீட்டை ரயில் நிலைய முன்பதிவு அலுவலகத்தில் நேரடியாகவும், ஐஆர்சிடிசி வலைதளம் அல்லது செல்போன் செயலிகள் மூலமாகவும் முன்பதிவு செய்ய முடியும்.

குளிர்சாதன வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கும், குளிர்சாதனம் அல்லாத படுக்கை மற்றும் உட்கார்ந்து செல்வதற்கான வகுப்புகளுக்கு காலை 11 மணி மணிக்கும் ஆன்லைனில் தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்குகிறது.

இந்த நிலையில், புத்தாண்டு நாளன்று பயணத்தை மேற்கொள்வதற்காக குளிர்சாதன வகுப்புகளுக்கான தட்கல் முன்பதிவு இன்று காலை 10 மணியளவில் தொடங்கியுள்ளது.

ஆனால், ஐஆர்சிடிசி வலைதளம் மற்றும் செல்போன் செயலிகள் செயலிழந்ததால் பயணிகளால் பயணச்சீட்டை முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ஐஆர்சிடிசி வலைதளத்தின் புகைப்படங்களை பகிர்ந்து வாடிக்கையாளர்கள ரயில்வே துறையை விமர்சித்துள்ளனர்.

“ஐஆர்சிடிசி இணையதளம் இன்று காலை 10 மணி முதல் முடங்கியுள்ளது, என்னால் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியவில்லை. நான் வாடிக்கையாளர் சேவையை அழைத்தபோது, ​​தளம் பராமரிப்பில் உள்ளது என்று அவர்கள் கூறுகிறார்கள், இந்த உலகில் யார் வேலை நேரத்தில் தளத்தை பராமரிப்பில் வைத்திருக்கிறார்கள் என்று கேட்க விரும்புகிறேன். உங்கள் தகவல் தொழில்நுட்ப குழுவை மாற்ற வேண்டும்” என்று ஒரு பயணி பதிவிட்டுள்ளார்.

மூன்றாவது முறை

இந்த மாதத்தில் இதுபோன்று ஐஆர்சிடிசி செயலி செயலிழப்பது இது மூன்றாவது முறையாகும்.

கடந்த டிசம்பர் 9ஆம் தேதி தட்கல் நேரத்தில் சுமார் ஒரு மணிநேரமாக ஐஆர்சிடிசி வலைதளம் பராமரிப்புப் பணியில் இருந்தது. அதேபோல், டிசம்பர் 26ஆம் தேதி வலைதளம் மற்றும் செல்போன் செயலி இரண்டும் ஒன்றரை மணிநேரமாக பராமரிப்புப் பணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.