‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குருகிராம் மார்க்கெட்டில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள காய்கறிகள் சாம்பல்

கந்த்சா காய்கறி சந்தையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயம் பிற காய்கறிகள் என பல லட்சம் மதிப்புள்ள 20,000 கூடைகள் எரிந்து சாம்பலானதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

News image

கோப்புப்படம்

Updated On :1 பிப்ரவரி 2024, 4:10 pm

DIN

குருகிராம்: கந்த்சா காய்கறி சந்தையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயம் பிற காய்கறிகள் என பல லட்சம் மதிப்புள்ள 20,000 கூடைகள் எரிந்து சாம்பலானதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

நேற்று இரவு 7 கடைகளில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் அறிந்தும், அதிகாரிகள் ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை கொண்டு தீயை அணைக்க சுமார் மூன்று மணி நேரம் போராடி அணைத்ததனர்.  தீயானது இரவு சுமார் 11.56 மணியளவில் அணைக்கப்பட்டது. 

முன்விரோதம் காரணமாக யாரோ தங்கள் கடைகளுக்கு தீ வைத்துள்ளதாக கடைக்காரர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து கந்த்சா காய்கறி சந்தையின் முன்னாள் தலைவர் கிருஷ்ணா யாதவ் தெரித்ததாவது: 

போட்டி காரணமாக ஒரு கடைக்கு தீ வைக்கப்பட்டதாகவும், அது அருகிலுள்ள கடைகளும் தீக்கிரையாக்கப்பட்டது. எனது கடையில் மட்டும் சுமார் 17,000 தக்காளி பெட்டிகள் எரிந்து சாம்பலானது.

இது தவிர, மற்ற கடைக்காரர்களின் ஆயிரக்கணக்கான பெட்டிகளும் தீயில் எரிந்து சாம்பலானது என்றார் காவல் துறை அதிகாரி ஒருவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.