பல வழக்குகளில், நீதிமன்றங்கள் சரியான தீர்ப்பை வழங்கவில்லை என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ் தனது கருத்தாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஞானவாபி வழக்கில், மசூதியின் நிலவறையில் ஹிந்துக்கள் பூஜை செய்ய அனுமதித்துப் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
ஞானவாபி மசூதி வளாக நிலவறையில் உள்ள ஹிந்துக் கடவுள்களுக்கு பூஜை நடத்த கடந்த புதன்கிழமை நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு சில மணி நேரங்களிலேயே பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள நிலவறைக் கதவு திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்த கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் ராம் கோபால், 'நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு எதிரான கருத்துகள் எப்போது இருக்கத்தான் செய்யும்' எனக் கூறினார். மேலும் 'நீதிமன்றம் எப்போதும் சரியான தீர்ப்புகளை வழங்குகிறதா? எனக் கேள்வியெழுப்பினார். 'எல்லா நேரத்திலும் நீதிமன்றத்தின் முடிவு சரியான இருக்காது" எனவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: ஹேமந்த் சோரனை 5 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!
'எதுவுமே இங்கு முற்றிலும் சரி என்றில்லை. எல்லா முடிவுகளுக்கும் ஆதரவானவர்களும் இருப்பார்கள், அதனை எதிர்ப்பவர்களும் இருப்பார்கள்.' எனக் கூறினார்.
ஞானவாபி மசூதியில் இந்துக் கடவுள்களுக்கான பூஜைகள் நடத்திய மறுநாள், ஞானவாபி மசூதி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தினை அணுகியது. ஆனால் உயர் நீதிமன்றம், மசூதி நிர்வாகத்தை அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெனிசுவேலாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! கட்டடங்கள் சேதம்!

தொடர்ந்து 3-வது நாளாகக் குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம்? (ஜூன் 25)

பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்! ஆட்டோ, ரியல் எஸ்டேட் பங்குகள் லாபம்!

சட்டப்பேரவை மரபை மீறவில்லை! திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனா
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


