விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

சிம்லாவில் நிலச்சரிவு, 2 பேர் பலி!

ஹிமாசலப் பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 

News image

கோப்புப்படம்

Updated On :6 பிப்ரவரி 2024, 11:41 am IST

ஹிமாசல பிரதேசம் சிம்லாவில் செவ்வாய்கிழமை காலை ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

ஜுங்கா சாலையில் அஷ்வணி குட் பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட ராக்கேஷ் (31) மற்றும் ராஜேஷ் (40) ஆகிய தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 

இரண்டு தொழிலாளர்களும் பிகார் மாநிலத்தைச் சேந்தவர்கள் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கல் உடைக்கும் இயந்திரங்களுக்கு அருகே தற்காலிகக் குடிசைகள் அமைத்து சில தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். 

இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் நூலிழையில் தப்பித்திட, இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கூடுதல் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.