கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அத்வானியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த நிதிஷ் குமார்!

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்ற பாஜக மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானியை பிகார் முதல்வர் நிதிஷ் குமார் வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

News image
அத்வானியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த நிதிஷ் குமார்
Updated On :8 பிப்ரவரி 2024, 10:17 am

DIN

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்ற பாஜக மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானியை பிகார் முதல்வர் நிதிஷ் குமார் வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியுடன் உறவை முறித்துக்கொண்டு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைந்த பிறகு, தனது முதல் தில்லி பயணத்தில் புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோரை சந்தித்தார். 

இந்த நிலையில், 96 வயதான அத்வானிக்கு கடந்த வாரம் மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கியது. இதையடுத்து முதல்வர் நிதிஷ் குமார் அத்வானியை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

அப்போது, ஜனதா தளம்(யுனைடெட்) தலைவர் அத்வானியை 2013ல் இருந்து பலமுறை பாஜக உடனான உறவில் விரிசல் ஏற்பட்ட போதிலும், அவருடனும் முன்னாள் பிரதமர் அடல் பிகார் வாஜ்பாயுடனும் இருந்த உறவுகளை நினைவு கூர்ந்தார் அத்வானி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.