அயோத்தி ராமர் கோயில் குறித்து மக்களவையில் இன்று விவாதம் நடத்தப்பட்டது.
உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கடந்த ஜன.22ல் ஸ்ரீராமபிரான் பிராண பிரதிஷ்டை கோலாகலமாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் ராமர் கோயில் குறித்து மக்களவையில் விவாதம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.
இந்த விவாதத்தின் போது பாஜக உறுப்பினர் சத்ய பால் சிங் பேசுகையில்,
ராமர் கோயில் பிரதிஷ்டையில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு ஸ்ரீராமபிரானின் அருளைப் பெற்றனர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது வரலாற்றுச் சிறப்புமிக்கது.
ராமர் அனைவருக்கும் சொந்தமானவர், இந்துக்களுக்கு மட்டும் அல்ல. ராமரின் இருப்பை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
முன்னாள் இந்தியக் காவல் சேவை (ஐபிஎஸ்) அதிகாரியும், கோயில் ஒரு வகுப்பு பிரச்னை அல்ல என்று சுட்டிக்காட்டியுள்ளார்.