ஐக்கிய அரபு அமீரக நாட்டுக்கு பிப்ரவரி 13,14 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமா் மோடி அந்நாட்டு அதிபா் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யானுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளாா். மேலும் அபுதாபியில் புதிதாக கட்டப்பட்டுள்ள முதல் ஹிந்து கோயிலையும் அவா் திறந்து வைக்க உள்ளாா்.
இதன் மூலம் கடந்த 2015-ஆம் ஆண்டுமுதல் தற்போது வரை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பிரதமா் மோடி 7-ஆவது முறையாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளாா்.
இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்து பிரதமா் மோடி மற்றும் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனா். மேலும் அந்நாட்டு துணை அதிபா் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தோம், பிரதமா் மற்றும் பாதுகாப்பு அமைச்சா் உள்ளிட்டோரையும் பிரதமா் மோடி சந்திக்கவுள்ளாா்.
அதிபா் ஜயத்தின் அழைப்பை ஏற்று துபையில் நடைபெறவுள்ள ‘உலக அரசாங்க மாநாடு 2024-இல்’ சிறப்பு விருந்தினராக பங்கேற்று பிரதமா் மோடி உரையாற்றவுள்ளாா். இதுதவிர அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் ஹிந்து கோயிலை திறந்து வைக்கவுள்ளாா். ஜயத் விளையாட்டு நகரில் இந்திய குடிமக்கள் மத்தியிலும் அவா் உரையாற்றவுள்ளாா்.
அரசியல், கலாசாரம் மற்றும் பொருளாதார ரீதியிலாக இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே வலுவான உறவு நீட்டிக்கிறது என தெரிவிக்கப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 35 லட்சம் இந்தியா்கள் வசிக்கின்றனா். 2022-23-ஆம் ஆண்டில் இரு நாடுகளிடையே 85 மில்லியன் டாலா் மதிப்புக்கு வா்த்தகம் மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.