வடக்கு கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள குன்னமங்கலம் பகுதியில் சிறுவன் உள்பட மூவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
சிந்து என்கிற மினி, அவரது மகள் ஆதிரா மற்றும் அவர்களது உறவினர் 13 வயது சிறுவன் அத்வைத் ஆகியோர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
ஆற்றில் குளிக்க சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முதலில் அந்த சிறுவன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அவனைக் காப்பாற்ற சென்ற தாயும் மகளும் ஆற்றில் சிக்கியிருக்கலாம் என காவலர்கள் தெரிவித்தனர்.
மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும் அவர்களைக் காப்பாற்ற இயலவில்லை என காவலர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.