பிகார் சட்டப் பேரவை கூட்டத்தில் ஆளுநர் உரைக்குப் பின்பு அவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராஜ்ய ஜனதா தளத்தின் அவைத் தலைவர் அவாத் பிஹாரி செளத்ரி அவரது பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் நிதீஷ் குமார் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கவுள்ளது.
9-வது முறையாக முதல்வரான நிதீஷ் குமார் தலைமையிலான ஆட்சி தொடர தேசிய ஜனநாயக் கூட்டணி தனது பெரும்பான்மையை இன்று அவையில் நிரூபிக்க வேண்டியுள்ளது.
பெரும்பான்மையை நிரூபிப்போம் என பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது.