திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பாகிஸ்தானில் வாக்கு எண்ணிக்கையின் போது துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஒரு தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின்போது அரசியல் கட்சிகளுக்கு இடையே நடைபெற்ற மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

News image
Updated On :15 பிப்ரவரி 2024, 9:32 am

DIN

பலுசிஸ்தான் அவாமி கட்சி(பிஏபி) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி(பிபிபி) ஆதரவாளர்கள் கராச்சியின் எல்லையில் உள்ள தொழில் நகரமான ஹப்பில் தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு வெளியே மோதிக்கொண்டனர்.

பிப்ரவரி 8 அன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பிஏபி முகமது சலே பூதானி வெற்றி பெற்றதாகக் கூறினார். ஆனால் பிபிபி அலிஹசன் செஹ்ரி முடிவை மாற்றுவதற்கு வாக்குகளை மீண்டும் எண்ணுமாறு கோரினார்.

இதையடுத்து, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மீண்டும் வாக்குகளை எண்ணும்படி உத்தரவிட்டுள்ளது.

39 வாக்குச் சாவடிகளில் வாக்குகள் முண்டும் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தபோது மோதல் ஏற்பட்டது. மேலும் இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.

பிபிபி ஆதரவாளர்கள் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதைத் தாமதப்படுத்தும் தந்திரம் என்று கூறப்படுகிறது. நிலைமையைக் கட்டுப்படுத்த எல்லைப் படைகள் அழைக்கப்பட்டுள்ளது.

பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த வாரம் பொதுத் தேர்தல்கள் நடந்து முடிந்த நாளிலிருந்து அமைதியின்மை நிலவுகிறது, குறைந்தபட்சம் நான்கு அரசியல் கட்சிகள் முக்கிய நெடுஞ்சாலைகளை மறித்து, குவெட்டாவிலும் மாகாணத்தின் பிற பகுதிகளிலும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.