பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மும்பை- கத்தார் இடையே புதிய விமான சேவை!

ஆகாஷா ஏர் நிறுவனம் தனது பன்னாட்டு விமான சேவையைத் தொடங்கவுள்ளது.

News image
ஆகாஷா ஏர்- ANI
Updated On :16 பிப்ரவரி 2024, 11:15 am

DIN

ஆகாஷா ஏர் நிறுவனம் தனது பன்னாட்டு விமான சேவையை மார்ச் 28 முதல் தொடங்கவுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

“கத்தார் மற்றும் இந்தியா இடையிலான வான்வழி போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் மும்பை முதல் தோஹா வரை வாரத்திற்கு நான்கு நாள்கள் இடை நில்லா விமானங்களை ஆகாஷா ஏர் மார்ச் 28 முதல் செயல்படுத்தவுள்ளோம்” என நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆகாஷா ஏர் நிறுவனத்தி்ன் தலைமை நிர்வாக அதிகாரி வினய் துபே, கத்தார் செல்லும் இந்த முன்னெடுப்பு, ஆகாஷா ஏர் நிறுவனத்தின் அடுத்த வளர்ச்சி என்றும் உலகின் சிறந்த 30 விமான நிறுவனங்களுள் அடுத்த பத்தாண்டில் ஆகாஷா ஏர் நிறுவனமும் ஒன்றாக உயரும் எனவும் குறிப்பிட்டார்.

தற்போது இந்த நிறுவனம் ஆகஸ்ட் 2022 முதல், 23 எண்ணிக்கையிலான போயிங் 737 மேக்ஸ் விமானங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.