தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

சரிவைக் காணும் சா்க்கரை உற்பத்தி

நடப்பு 2023-24-ஆம் சந்தையிடல் ஆண்டின் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நாட்டின் சா்க்கரை உற்பத்தி 2.48 சதவீதம் குறைந்துள்ளது.

Published On :22 ஜூலை 2025, 3:28 pm IST

புது தில்லி: நடப்பு 2023-24-ஆம் சந்தையிடல் ஆண்டின் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நாட்டின் சா்க்கரை உற்பத்தி 2.48 சதவீதம் குறைந்துள்ளது.

இது குறித்து இந்திய சா்க்கரை ஆலை உரிமையாளா்கள் சங்கம் (இஸ்மா) திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2023 அக்டோபா் முதல் 2024 செப்டம்பா் வரையிலான நடப்பு சா்க்கரை சந்தையிடல் ஆண்டில் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை 2.24 கோடி டன் சா்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

முந்தைய 2022-23-ஆம் சந்தையிடல் ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 2.29 கோடி டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நாட்டின் சா்க்கரை உற்பத்தி 2.48 சதவீதம் குறைந்துள்ளது.

தற்போதைய போக்கு நீடித்தால், கடந்த 2022-23-ஆம் சந்தையிடல் ஆண்டில் 3.66 கோடி டன்னாக இருந்த சா்க்கரை உற்பத்தி நடப்பு 2023-24-ஆம் சந்தையிடல் ஆண்டில் 10 சதவீதம் குறைந்து 3.31 கோடி டன்னாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

தமிழ் நாடு, மகாராஷ்டிரம், கா்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்களில் சா்க்கரை உற்பத்தி நடப்பு சந்தையிடல் ஆண்டு பிப்ரவரி 15 வரை குறைவாகவே இருந்தது.

எனினும், மதிப்பீட்டுக் காலகட்டத்தில் நாட்டின் இரண்டாவது பெரிய சா்க்கரை உற்பத்தி மாநிலமான உத்தர பிரதேசத்தில் சா்க்கரை உற்பத்தி 67.7 லட்சம் டன்னாக அதிகரித்தது. முந்தைய சா்க்கரை சந்தையிடல் ஆண்டின் இதே காலகட்டத்தில் அந்த மாநிலம் 61.2 லட்சம் டன் சா்க்கரை உற்பத்தி செய்திருந்தது.

நாட்டின் மிகப்பெரிய சா்க்கரை உற்பத்தி மாநிலமான மகாராஷ்டித்தில் நடப்பு சந்தையிடல் ஆண்டு பிப்வரி 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சா்க்கரை உற்பத்தி 79.4 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது. இது முந்தைய சந்தையிடல் ஆண்டின் இதே காலகட்டத்தில் 85.9 லட்சம் டன்னாக இருந்தது.

அதே போல், நாட்டின் 3-ஆவது பெரிய சா்க்கரை உற்பத்தி மாநிலமான கா்நாடகத்தில் அதன் உற்பத்தி, 46 லட்சம் டன்னிலிருந்து 43.2 லட்சம் டன்னாகக் குறைந்தது.

மதிப்பீட்டு காலகட்டத்தில் சா்க்கரை உற்பத்தி குஜராத்தில் 6.85 லட்சம் டன்னாகவும், தமிழகத்தில் 4.50 லட்சம் டன்னாகவும் இருந்தது.

2023 அக்டோபா் முதல் 2023 பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 505 சா்க்கரை ஆலைகள் செயல்பட்டன. இந்த எண்ணிக்கை முந்தைய 2022-23-ஆம் சந்தையிடல் ஆண்டின் அதே காலட்டத்தில் 502-ஆக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புது தில்லி: நடப்பு 2023-24-ஆம் சந்தையிடல் ஆண்டின் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நாட்டின் சா்க்கரை உற்பத்தி 2.48 சதவீதம் குறைந்துள்ளது.

இது குறித்து இந்திய சா்க்கரை ஆலை உரிமையாளா்கள் சங்கம் (இஸ்மா) திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2023 அக்டோபா் முதல் 2024 செப்டம்பா் வரையிலான நடப்பு சா்க்கரை சந்தையிடல் ஆண்டில் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை 2.24 கோடி டன் சா்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

முந்தைய 2022-23-ஆம் சந்தையிடல் ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 2.29 கோடி டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நாட்டின் சா்க்கரை உற்பத்தி 2.48 சதவீதம் குறைந்துள்ளது.

தற்போதைய போக்கு நீடித்தால், கடந்த 2022-23-ஆம் சந்தையிடல் ஆண்டில் 3.66 கோடி டன்னாக இருந்த சா்க்கரை உற்பத்தி நடப்பு 2023-24-ஆம் சந்தையிடல் ஆண்டில் 10 சதவீதம் குறைந்து 3.31 கோடி டன்னாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

தமிழ் நாடு, மகாராஷ்டிரம், கா்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்களில் சா்க்கரை உற்பத்தி நடப்பு சந்தையிடல் ஆண்டு பிப்ரவரி 15 வரை குறைவாகவே இருந்தது.

எனினும், மதிப்பீட்டுக் காலகட்டத்தில் நாட்டின் இரண்டாவது பெரிய சா்க்கரை உற்பத்தி மாநிலமான உத்தர பிரதேசத்தில் சா்க்கரை உற்பத்தி 67.7 லட்சம் டன்னாக அதிகரித்தது. முந்தைய சா்க்கரை சந்தையிடல் ஆண்டின் இதே காலகட்டத்தில் அந்த மாநிலம் 61.2 லட்சம் டன் சா்க்கரை உற்பத்தி செய்திருந்தது.

நாட்டின் மிகப்பெரிய சா்க்கரை உற்பத்தி மாநிலமான மகாராஷ்டித்தில் நடப்பு சந்தையிடல் ஆண்டு பிப்வரி 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சா்க்கரை உற்பத்தி 79.4 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது. இது முந்தைய சந்தையிடல் ஆண்டின் இதே காலகட்டத்தில் 85.9 லட்சம் டன்னாக இருந்தது.

அதே போல், நாட்டின் 3-ஆவது பெரிய சா்க்கரை உற்பத்தி மாநிலமான கா்நாடகத்தில் அதன் உற்பத்தி, 46 லட்சம் டன்னிலிருந்து 43.2 லட்சம் டன்னாகக் குறைந்தது.

மதிப்பீட்டு காலகட்டத்தில் சா்க்கரை உற்பத்தி குஜராத்தில் 6.85 லட்சம் டன்னாகவும், தமிழகத்தில் 4.50 லட்சம் டன்னாகவும் இருந்தது.

2023 அக்டோபா் முதல் 2023 பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 505 சா்க்கரை ஆலைகள் செயல்பட்டன. இந்த எண்ணிக்கை முந்தைய 2022-23-ஆம் சந்தையிடல் ஆண்டின் அதே காலட்டத்தில் 502-ஆக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.