மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

காங்கிரஸ் - சமாஜவாதி இடையே பிரச்னையில்லை!

ராகுலின் ஒற்றுமை நீதி நடைப்பயணம் பிகார் மாநிலத்திலிருந்து உத்தரப் பிரதேச மாநிலத்திற்குள் இன்று நுழைந்தது.

News image
செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்கும் மல்லிகார்ஜுன கார்கே
Updated On :19 பிப்ரவரி 2024, 3:08 pm

DIN

சமாஜவாதிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே எந்தவித முரண்பாடுமில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் ஒற்றுமை நீதி நடைப்பயணம் பிகார் மாநிலத்திலிருந்து உத்தரப் பிரதேச மாநிலத்திற்குள் இன்று நுழைந்தது. இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் ராகுல் காந்தியுடன் பங்கேற்றனர்.

அமேதியில் நடைபெற்ற ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருகைப் புரிந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவுக்கும் எங்களுக்கும் (காங்கிரஸ்) இடையே எந்தவித கருத்து மோதலுமில்லை. அனைத்தும் சரிசெய்யப்பட்டுவிட்டது. தொகுதிப் பங்கீடை அகிலேஷ் ஏற்றுக்கொண்டார். எங்கள் தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எங்களுக்கு இடையே எந்தவித பிரச்னையுமில்லை எனக் குறிப்பிட்டார்.

ராகுல் காந்தியின் ஒற்றுமை நீதிப் பயணம் கடந்த மாதம் மணிப்பூரில் தொடங்கியது. அஸ்ஸாம், மேகாலயா, மேற்குவங்கம், ஜார்கண்ட் மாநிலத்தை தொடர்ந்து இன்று பிகாரிலிருந்து உத்தரப் பிரதேசம் நுழைந்தது.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தொகுதிகளை வரையறை செய்த பிறகு ராகுல் காந்தியின் ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் பங்கேற்பதாக உத்தரப் பிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் இன்று காலை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.