கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வயநாட்டில் போட்டியிடுவது குறித்து ராகுல் யோசிக்க வேண்டும்: பிருந்தா காரத்

வயநாடு தொகுதியில் போட்டியிடுவது குறித்து ராகுல் காந்தி யோசிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.

News image

பிருந்தா காரத், ராகுல் காந்தி

Updated On :27 பிப்ரவரி 2024, 8:00 am

DIN

வயநாடு தொகுதியில் போட்டியிடுவது குறித்து ராகுல் காந்தி யோசிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) கூட்டணி சாா்பில் மக்களவைத் தோ்தலில் 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளா் பினோய் விஸ்வம் திங்கள்கிழமை அறிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் பொதுச் செயலருமான டி.ராஜாவின் மனைவியுமான ஆனி ராஜா, காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி எம்.பி.-ஆக உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் தெரிவித்ததாவது,

“வயநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆனி ராஜன் போட்டியிடவுள்ளதாக அக் கட்சி அறிவித்துள்ளது. இடதுசாரி ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகவும் உள்ளார். பாஜகவுக்கு எதிராக போராடுவதாக கூறும், காங்கிரஸும், ராகுல் காந்தியும் யோசிக்க வேண்டும். கேரளத்தில் இடதுசாரிகளுக்கு எதிராக போட்டியிடுவதன் மூலம் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்? அதனால், அவர்கள் போட்டியிடும் தொகுதி குறித்து யோசிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகித்தாலும், கேரளத்தில் காங்கிரஸும், இடதுசாரிகளும் தனித்தனியே போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.