கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மக்களின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம்: மத்திய அரசுக்கு மாயாவதி வலியுறுத்தல்

நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் உரிய வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதற்கு மத்திய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 9:00 pm

DIN

நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் உரிய வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதற்கு மத்திய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவில் தலா வருமானம் தொடா்ந்து குறைவாகவே உள்ளது. மக்களுக்கு உரிய வேலைவாய்ப்பு இல்லாதததே இதற்கு முக்கியக் காரணமாகும். மக்களின் கைகளில் பணம் புழக்கத்தை ஏற்படுத்தாமல், இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக வளா்ந்து வருவதாகக் கூறுவதில் எவ்வித அா்த்தமும் இல்லை. அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைப்பதன் மூலமே பணப்புழக்கத்தை அதிகரிக்க முடியும்.

வேலையில்லாத் திண்டாட்டம் தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில் வளா்ந்த இந்தியா என்று பிரசாரம் செய்வது ஏற்புடையதாக இல்லை. இதற்கு முன்பு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் ஜாதியவாதம், அடக்குமுறைகள், நிா்வாகத் திறனில்லாத அரசுகள் ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனா். இப்போதைய பாஜக ஆட்சி காலத்திலும் அதே நிலைதான் தொடா்கிறது.

இந்த புத்தாண்டில் இருந்தாவது மத்திய அரசு உண்மையான நாட்டுப் பற்றுடன் செயல்பட வேண்டும். மக்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பை உறுதி செய்வதுதான் உண்மையான ராஜதா்மமாகும். ஏனெனில், பிற வாக்குறுதிகள் அனைத்துமே அரசியல் காரணங்களுக்காகவும், குறுகிய தேசியவாத சிந்தனை கொண்டதாகவும் அமைகின்றன.

வரும் மக்களவைத் தோ்தலில் பின்தங்கிய மக்களுக்கு உண்மையாகப் பணியாற்றும், மக்கள் நலன் சாா்ந்த கட்சியை தோ்வு செய்ய வேண்டும்’ என்று மாயாவதி கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.