மிசோரம் மாநிலம் லுங்லேயில் ரிக்டர் அளவுகோலில் 3.5 அளவிலான நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை ஏற்பட்டது.
இதுதொடா்பாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'மிசோரத்தில் வெள்ளிக்கிழமை காலை 7:18 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 3.5 அலகுகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
நிலநடுக்கத்தால் எவ்வித உயிா்ச்சேதமும் பொருள் சேதமும் ஏற்பட்டதற்கான உடனடி தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.