ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இந்தியாவில் அதிக மாசுள்ள நகரம்: ஆய்வு சொல்வதென்ன?

இந்தியாவில் அதிக மாசுள்ள நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் மேகாலயா இடம்பெற்றுள்ளது.

News image
Updated On :10 ஜனவரி 2024, 3:02 pm

DIN

மேகாலயா மாநிலத்தின் பைரனிஹட், இந்தியாவில் அதிகம் மாசுள்ள நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து பிகாரின் பெகுசராய் மற்றும் உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

தில்லியில் மாசு, குளிர்காலத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள் அதிகம். ஆற்றல் மற்றும் தூய காற்று ஆய்வு நிறுவனம் (சிஆர்இஏ) நடத்திய இந்த ஆய்வில் 8-வது இடத்தில் தில்லி இடம்பெற்றுள்ளது.

சுனில் தஹியா, தென்கிழக்கு ஆசியாவின் சிஆர்இஏவின் ஆய்வாளர், 2023-ல் 227 நகரங்களில் 75 சதவீதமான நாள்களில் நிலவிய மாசுபாட்டின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இவற்றில் 85 நகரங்கள் ஏற்கெனவே தேசிய தூய காற்றுத் திட்டத்தின் (என்சிஆபி) கீழ் உள்ளடங்கியது. இந்தத் திட்டத்தின் மூலம் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சிகள் 2019 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2019-ல் முன்னெடுக்கப்பட்ட 20 முதல் 30 சதவீத இலக்கைக் கொண்டு செயல்படுத்தப்பட்ட முன்னெடுப்பு பலன் தரவில்லை. இந்த நிலையில் அரசு 40 சதவீத இலக்கை நிர்ணயித்துள்ளது.

5 ஆண்டுகளாக இந்தத் திட்டம் அமலில் இருந்தும் 131 நகரங்களில் 44 நகரங்கள் மட்டுமே ஆய்வு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக தஹியா தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வு முறையாக செய்யப்படாததால் 64 சதவீத நிதி பயனற்ற முறையில் செலவிடப்பட்டதாகவும் அதனால் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துல்லிய மாசுக்களான பிஎம்10 அளவீட்டில் அதிகமாக இருக்கும் பைரனிஹட் காற்று மாசு சராசரியாக ஒரு கியூபிக் மீட்டருக்கு 301 மைக்ரோகிராம் என்ற அளவில் உள்ளது.

அஸ்ஸாமில் உள்ள சில்சர் பிஎம்10 அளவீட்டில் மிகக் குறைவான பதிவைக் கொண்டுள்ள நகரமாக உள்ளது.

அதிக மாசுபாடு கொண்ட 50 நகரங்களில் பிகாரில் 18 நகரமும் ஹரியானாவில் 8 நகரமும் ராஜஸ்தானில் 8 நகரமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.