ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக 5 லட்சம் லட்டு அனுப்பி வைப்பு!

ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஷ்வர் கோயிலில் தயாரிக்கப்பட்ட ஐந்து லட்சம் லட்டுகளை முதல்வர் மோகன் யாதவ்  அயோத்திக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

போபால்: ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஷ்வர் கோயிலில் தயாரிக்கப்பட்ட ஐந்து லட்சம் லட்டுகளை ஏற்றிச் செல்லும் ஐந்து லாரிகளை மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் இன்று அயோத்திக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர்களை கடுமையாக விமர்சித்த யாதவ், ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பை நிராகரித்தவர்களுக்கு நல்ல புத்தி நிலவ வேண்டும் என்றார்.

அயோத்தி நிகழ்வு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறி எதிர்க்கட்சிகள் அழைப்பை நிராகரித்துள்ளன.

பேரரசர் விக்ரமாதித்யா அயோத்தியில் முன்பு கோயிலைக் கட்டினார். 500 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு தற்போது ராமர் கருவறைக்கு திரும்புகிறார். ஜனவரி 22ஆம் தேதி அவர்களுக்கு நல்ல புத்தி கிடைக்கட்டும். அவர்களும் ராமரின் தரிசனத்தைப் பெறட்டும். யாதவ் தனது அமைச்சரவை சகாக்களுடன் கொடிகளை அசைத்து, ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களுக்கு மத்தியில், தேர் வடிவிலான அலங்கரிக்கப்பட்ட லாரியை துவக்கி வைத்தார்.

பாபா மகாகல் பிரசாதமாக அயோத்திக்கு இனிப்பு அனுப்பப்படும் என்று முதல்வர் அறிவித்த ஐந்து நாட்களில் குறைந்தது 150 கோயில் ஊழியர்கள் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த லட்டுகளை தயாரிப்பதில் ஈடுபட்டதாக மகாகாளேஸ்வரர் கோயிலின் உதவி நிர்வாகி மூல்சந்த் ஜுன்வால் தெரிவித்தார்.

அண்டை மாநிலமான சத்தீஸ்கர் 300டன் சிறந்த அரிசியை அயோத்திக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com