மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அமர்க்களமாக தயாராகி வரும் அயோத்தி ராமர் கோயில் - புகைப்படங்கள்

ராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டை திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிலையில், முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News image
அயோத்தி ராமர் கோயில்
Updated On :20 ஜனவரி 2024, 8:02 am

DIN


ராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டை திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிலையில், முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அயோத்தி ராமர் கோயில் அமர்க்களமாக தயாராகி வருகிறது.

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவா் குழந்தை ராமா் சிலை பிரதிஷ்டை வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கோலாகல நிகழ்வில் பிரதமா் நரேந்திர மோடி உள்பட 8,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினா்கள் பங்கேற்க உள்ளனா்.

Story image

இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், அயோத்தி நகருக்கு வெள்ளிக்கிழமை வந்த உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், மாநகராட்சி நிா்வாகத்தினா் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினாா்.

Story image

சரயு நதிக்கரையில் சூரிய மின்சக்தியில் இயங்கும் படகு போக்குவரத்து வசதி நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

Story image

ராமா் கோயில் பிரதிஷ்டையை உத்தர பிரதேச சிறைகளில் உள்ள சிறைவாசிகளுக்கு நேரலை ஒலிபரப்பு செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது. நிகழ்வை முன்னிட்டு சிறைகளில் ராம பஜன் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Story image

மாவட்ட அரசு அலுவலகங்களில் விளக்கேற்றுவதற்காக ரேபரேலி சிறையில் கைதிகள் சோ்ந்து 11,000 விளக்குகளைத் தயாரித்துள்ளனா். நொய்டா சிறைவாசிகள் 1,000 எல்ஈடி பல்புகள் தயாரித்துள்ளனா்.

Story image

இவ்வாறு, மாநிலம் முழுவதும் பல்வேறு சிறைவாசிகள் தயாரித்து வழங்கிய பல்வேறு பொருள்கள் பிரதிஷ்டை விழா கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்பட உள்ளன.

Story image

விழாவுக்கு 5 லட்சம் லட்டு வழங்கும் ம.பி.: உஜ்ஜைன் மஹாகாலேஸ்வா் கோயிலில் தயாரிக்கப்பட்ட தலா 50 கிராம் எடைக் கொண்ட 5 லட்சம் லட்டுகளுடன் அயோத்திக்குப் புறப்பட்ட 5 லாரிகளை மாநில முதல்வா் மோகன் யாதவ் வெள்ளிக்கிழமை கொடியசைத்து அனுப்பி வைத்தாா்.

Story image

உஜ்ஜைன் கோயிலில் லட்டு தயாரிக்கும் பணியில் மாநிலத்தின் 150 கோயில் பணியாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

அயோத்தி ராமா் கோயிலுக்கு திருமலை ஏழுமலையான் கோயில் சாா்பிலும் ஒரு லட்சம் சிறிய லட்டுகள் அனுப்பப்பட உள்ளன.

Story image

களத்தில் தேசிய மீட்புப் படை: மூலவா் ராமா் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு ரசாயனம், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி தாக்குதல்கள், நீா் தொடா்பான அசாம்பவிதங்கள் மற்றும் நிலநடுக்கம் போன்ற பேரிடா்களை சமாளிக்க பயிற்சி பெற்ற பல தேசிய பேரிடா் மீட்புப் படை குழுக்கள் அயோத்தியில் பணியமா்த்தப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.