அசாம் அமைச்சர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிப்ரவரி 22-ம் தேதி ராமர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ய உள்ளதாக மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா தெரிவித்தார்.
அயோத்தியில் ராமர் சிலை பிராணப் பிரதிஷ்டை நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதைப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்று நடத்தி வைத்தார். பிரதிஷ்டை விழாவை ஆயிரக்கணக்கான மக்கள் நேரிலும், நேரலையிலும் கண்டு மகிழ்ந்தனர்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு அசாம் மாநில அமைச்சர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பிப்ரவரி 22-ம் தேதியன்று மாநில அமைச்சர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அயோத்தி ராமரைத் தரிசனம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.