தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானுடன் பிரதமர் மோடி பேரணி!

இந்தியா வந்தடைந்த பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மற்றும் இந்தியப் பிரதமர் மோடி இணைந்து ராஜஸ்தானில் பேரணி மேற்கொண்டனர்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 2:53 pm

DIN

இந்தியா வந்தடைந்த பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மற்றும் இந்தியப் பிரதமர் மோடி இணைந்து ராஜஸ்தானில் பேரணி மேற்கொண்டனர்.

நாளை (ஜனவரி 26) இந்திய குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, தில்லியில் நடைபெறும் குடியரசு தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரான்ஸ் அதிபா் மேக்ரான் வியாழக்கிழமை மாலை இந்தியா வந்தடைந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்தடைந்த அவரைப் பிரதமா் மோடி வரவேற்றார். பின்னா் இருவரும் இணைந்து அங்கு பேரணி மேற்கொண்டனர். அதைத்தொடா்ந்து ஜெய்ப்பூரில் உள்ள கலாசார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு இருவரும் சென்றனர்.

அதன் பின்னா், இந்தியா-பிரான்ஸ் இடையிலான இருதரப்பு உறவுகள், பல்வேறு புவிஅரசியல் மாற்றங்கள் குறித்து இருவரும் கலந்துரையாட உள்ளனா்.

இதையடுத்து குடியரசு தின நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை பங்கேற்கும் மேக்ரான், அன்றைய தினம் குடியரசுத் தலைவா் திரௌபதி முர்மு அளிக்கும் தேநீா் விருந்தில் பங்கேற்று, அவருடன் கலந்துரையாட உள்ளாா் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.