சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும்: சுஷில் குப்தா

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என்று மாநிலங்களவை உறுப்பினர் சுஷில் குப்தா தெரிவித்துள்ளார்.

News image
சுஷில் குப்தா
Updated On :26 ஜனவரி 2024, 3:40 pm

DIN

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என்று மாநிலங்களவை உறுப்பினர் சுஷில் குப்தா தெரிவித்துள்ளார்.

இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக கூட்டணியை எதிராக காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.

இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி மேற்குவங்கத்தில் தனித்துப் போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவித்தார்.

மேலும் பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

இந்நிலையில் கூட்டணி குறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுஷில் குப்தா வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். 

அவர் பேசியதாவது, “ஹரியாணாவில் வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 90 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும். மக்களவைத் தேர்தலிலும் எங்களின் நிலைப்பாட்டை தேசியத் தலைமையிடம் தெரிவிப்போம். 

ஹரியாணா மாநிலத்தில் நாங்கள் வலுவாக உள்ளோம். எங்களால் தனியாகவும் போட்டியிட முடியும், கூட்டணியிலும் போட்டியிட முடியும். இறுதி முடிவினை கட்சித் தலைமையே எடுக்கும்.” என்று கூறினார்.

இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தன்னிச்சையாக அறிவித்து வருவது கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.