தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

மணிப்பூரில் அமைதியைக் கொண்டுவர முயற்சித்து வருகிறோம்: மணிப்பூர் டிஜிபி

மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட மத்திய, மாநில அமைப்புகள் இணைந்து பணியாற்றி வருவதாக அம்மாநில டிஜிபி ராஜீவ் சிங் தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :26 ஜனவரி 2024, 6:36 pm IST

மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட மத்திய, மாநில அமைப்புகள் இணைந்து பணியாற்றி வருவதாக அம்மாநில டிஜிபி ராஜீவ் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் முதல் மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினர் இடையே வன்முறை நீடித்து வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு மணிப்பூர் மாநில டிஜிபி ராஜீவ் சிங் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசினார்.

அதில் அவர் கூறியதாவது, “வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் அமைதியைக் கொண்டு வருவதற்கு மத்திய மற்றும் மாநில படைகள் இணைந்து மாவட்ட அளவிலான குழுக்களை அமைத்து பணியாற்றி வருகின்றன. 

என்னைப் பொருத்தவரை அனைத்து படைகளும் சமமானவை. மத்திய மற்றும் மாநில படைகள் இரண்டும் இணைந்து செயலாற்றி வருகின்றன. இந்த வன்முறையினால் கடந்த அக்டோபர் மாதம் காவல்துறை அதிகாரி சிங்தம் ஆனந்த் கொல்லப்பட்டார். அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் மணிப்பூரில் அமைதி திரும்பும்.” என்று தெரிவித்தார்.

கடந்த மே மாதம் தொடங்கி, 9 மாதங்களாக நடைபெற்றுவரும் மணிப்பூர் வன்முறையினால் இதுவரை 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.