அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் நடப்பாண்டுக்கான பட்ஜெட் தொகை ரூ.5,142 கோடியாக அதிகரிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் நடப்பாண்டுக்கான பட்ஜெட் தொகையை ரூ.5,142 கோடியாக உயர்த்தி  திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 1:39 pm

DIN

திருப்பதி : உலகப் பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், 2024-2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர பட்ஜெட் தொகையை ரூ.5,142 கோடியாக உயர்த்தி திருப்பதி கோயில் நிர்வாக அமைப்பான ’திருமலை திருப்பதி தேவஸ்தானம்(டிடிடி)’ ஒப்புதல் அளித்துள்ளது. 

திருப்பதி கோயிலுக்கு உண்டியல் காணிக்கையாக ரூ.1,611 கோடி பெறப்பட்டுள்ளதாகவும், வட்டி வருமானமாக ரூ.1,167 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டு பெறப்பட்ட வருமானத்தை விட ரூ.100 கோடி அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும், பிரசாதச் சீட்டு மூலம் ரூ.600 கோடி வருமானம் பெறப்பட்டுள்ளதாகவும், தரிசனைச் சீட்டு மூலம் ரூ.338 கோடி வருமானம் பெறப்பட்டுள்ளதாகவும், வங்கிக் கணக்கு நிலுவைத் தொகையாக ரூ.347 கோடி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், 20234-2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தொகை ரூ.5,123 கோடியாக ஆக இருந்த நிலையில், தற்போது பட்ஜெட் தொகை மேலும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத் தலைவர் பி கருணாகர ரெட்டி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பட்ஜெட் தொகைக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

பட்ஜெட் தொகையில் ரூ.1,733 கோடி திருப்பதி கோயில் நிர்வாக பணியாளர்களின் சம்பளத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்காக ரூ.751 கோடியும், கோயில் பராமரிப்புச் செலவுக்காக ரூ.190 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024-25 ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேச மாநில அரசுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பங்களிப்பு ரூ.50 கோடியாக இருக்கும்  என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.