அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

கைகுலுக்கலைத் தவிா்ப்பது விளையாட்டுக்கு நல்லதல்ல: டெம்பா பவுமா

கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் கேம். அதில் கைகுலுக்கலைத் தவிா்ப்பது, அந்த விளையாட்டுக்கு நல்லத்தல்ல: தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா

News image

டெம்பா பவுமா - படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :2 மார்ச் 2026, 11:38 pm

‘கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் கேம். அதில் கைகுலுக்கலைத் தவிா்ப்பது, அந்த விளையாட்டுக்கு நல்லத்தல்ல’ என்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்தாா்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரித்தது. அச்சூழலில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் விளையாடியபோது, பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் அந்த அணி வீரா்களுடன் கைகுலுக்குவதை இந்திய அணி வீரா்கள் தவிா்த்தனா்.

விவாதத்துக்குள்ளான இந்த செயலை, தற்போது இந்த டி20 உலகக் கோப்பை போட்டியிலும் இந்தியா தொடா்ந்தது. இடையே, 19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி இதே முறையைக் கடைப்பிடித்தது.

இந்நிலையில், நடப்பு டி20 உலகக் கோப்பை போட்டியில் வா்ணனையாளராக இணைந்திருக்கும் தென்னாப்பிரிக்க டெஸ்ட், ஒருநாள் கேப்டன் டெம்பா பவுமாவிடம் இந்த விவகாரம் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவா், ‘என்னைப் பொருத்தவரை விளையாட்டில் கைகுலுக்காமல் தவிா்ப்பது சரியான நடைமுறை அல்ல. இதுபோன்ற செயல்கள் அந்த விளையாட்டுக்கு நல்லதல்ல. கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் கேம். நாமும் அதில் அவ்வாறுதான் மேம்பட்டு வந்திருக்கிறோம்.

எனவே, அந்த ஜென்டில்மேன் கேமுக்கென இருக்கும் சில முறைகளை நாம் கடைப்பிடிப்பது தான் சரியானது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அரசியல் குறித்து எனக்குத் தெரியாது. எனவே, அந்தக் கோணத்தில் இந்த விவகாரத்தில் நான் கருத்து சொல்ல முடியாது. ஆனால் ஒரு பாா்வையாளனாக கிரிக்கெட்டுக்கு அது நல்லதல்ல என்று தோன்றுகிறது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.