தேச விரோத வழக்கில் மேலும் 3 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

தேச விரோத வழக்கில் மேலும் 3 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக மூவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Published on

புது தில்லி: தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தடை செய்யப்பட்ட பாப்புலர் ப்ஃரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பைச் சேர்ந்த மூவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

இஸ்லாமிய இளைஞர்களைப் பயங்கரவாதம் நோக்கி செலுத்தியது, அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தது 2047-க்குள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வரத் திட்டமிட்டது ஆகிய சதி திட்டங்களில் அவர்கள் ஈடுபட்டதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

சட்டத்திற்கு புறம்பான மற்றும் தேச விரோதமான செயல்களில் ஈடுபட்டுவரும் காரணங்களுக்காக வஜீத் அலி, முபாரக் அலி மற்றும் சம்ஷேர் கான் ஆகியோர் மீது ராஜஸ்தானில் சதி வழக்கு தொடரப்பட்டது.

முன்னதாக ஆஷிப், சாதிக் மற்றும் முகமது சுஹெல் ஆகியோர் மீது இஸ்லாமிய இளைஞர்களைப் பயங்கரவாத செயல்களுக்குப் பயன்படுத்த அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி 2047-க்குள் கொண்டுவரும் சதித் திட்டத்திற்கு எதிராக இருப்பவர்களை தாக்கவும் அரசை எதிர்க்கவும் இந்த ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com