ஆயிரம் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து திருடர்களைப் பிடித்த காவல்துறை

திருட்டு குற்றத்தில் ஈடுபட்ட மூவரை சிசிடிவி உதவியால் காவலர்கள் கைது செய்துள்ளனர்.
ஆயிரம் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து திருடர்களைப் பிடித்த காவல்துறை
Updated on
1 min read

தானே: திருட்டு கும்பலை சேர்ந்த மூவரை கைது செய்துள்ளது, தானே காவல்துறை. இவர்களை அடையாளம் காண குறைந்தது ஆயிரம் சிசிடிவி காட்சி பதிவுகளையாவது ஆய்வு செய்ததாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்பம் மற்றும் நுண்ணறிவு சார்ந்து உள்ளீடுகளைத் தேர்வு செய்ததாகவும் அதுவே நகை பறிப்பில் ஈடுபட்ட மூவரைப் பின்தொடர்ந்து கைது செய்ய உதவியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

வர்தக் நகர், சிதல்சர் மற்றும் கபூரபாவடி காவல் துறை கட்டுப்பாட்டு பகுதிகளில் நகை பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.

இந்த நிலையில், திருடப்பட்ட நகைகள் மற்றும் மோட்டர் சைக்கிள் ஆகியவற்றை கைது செய்தவர்களிடமிருந்து காவலர்கள் மீட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com