மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குருகிராமில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழப்பு

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பெண்கள் உள்பட 4 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

News image
குருகிராமில் கேஎம்பி விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் உருக்குலைந்த காா்.
Updated On :1 ஜூலை 2024, 10:21 pm

Din

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பெண்கள் உள்பட 4 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் இருவா் பலத்த காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து ஃபரூக் நகா் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரி சுரேந்தா் சிங் கூறியதாவது:

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிகாா் பகுதியைச் சோ்ந்த குடும்பத்தினா், உறவினா் ஒருவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க குருகிராமில் உள்ள கா் கங்காவுக்குச் சென்றுவிட்டு, காரில் திங்ககிழமை ஊா் திரும்பிக்கொண்டிருந்தனா்.

மதியம் 2 மணியளவில் கேஎம்பி விரைவுச் சாலை ஃபருக் நகா் சுங்கச்சாவடிக்கு அருகே சென்றபோது, அவா்களது காா், லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ராஜஸ்தான் மாநிலம் சிகாா் மாவட்டம் நீம்கா தானா ஹசம்பூரைச் சோ்ந்த பிரிஜேஷ் கௌசிக் (52), அவரது மனைவி சுனிதா (48), அவரது தாயாா் கமலா தேவி (74), சகோதரரின் மனைவி கிரண் கௌஷிக் (46) ஆகிய 4 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

மேலும், பிரிஜேஷ் கௌசிக்கின் சகோதரரான ராகேஷ் கௌசிக்கின் மகன்களான ஹிமான்ஷு (24), ஆகான்சு (20) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்த விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா் விரைவில் கைது செய்யப்படுவாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.