ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

கைதுக்கு எதிராக கேஜரிவால் மனு: சிபிஐ-யிடம் விளக்கம் கேட்கும் நீதிமன்றம்

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தொடர்ந்த மனு மீது சிபிஐக்கு உயர் நீதிமன்றம் நோட்டிஸ் பிறப்பித்துள்ளது.

News image

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்

Updated On :2 ஜூலை 2024, 9:28 am

DIN

புது தில்லி: கலால் கொள்கை ஊழல் வழக்கில் தன்னை சிபிஐ கைது செய்ததை எதிா்த்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு தில்லி உயா்நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விசாரணையை ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உயர் நீதிமன்றம்.

கலால் கொள்கை வழக்கில், சிபிஐ கைதுக்கு எதிரான கேஜரிவாலின் மனு உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், மனு மீது பதிலளிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.

திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, நீதிபதி நீனா பன்சல் கிருஷ்ணா முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான கேஜரிவால் ஜூன் 26 ஆம் தேதி மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) காவலில் தன்னை மூன்று நாள்கள் விசாரிக்க அனுமதித்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்தும் முறையிட்டுள்ளாா்.

ஜூன் 29 அன்று, கேஜரிவாலை ஊழல் வழக்கில் ஜூலை 12 வரை நீதிமன்றக் காவலில் வைக்க விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில், அவரது பெயா் முக்கிய சதிகாரா்களில் ஒருவராக வெளிப்பட்டுள்ளது என்றும், விசாரணை இன்னும் நடந்து கொண்டிருப்பதால், அவரை மேலும் காவலில் வைத்து விசாரிக்க வேண்டியிருக்கலாம் என்றும் கூறியிருந்தது.

அமலாக்க துறை தாக்கல் செய்த பணமோசடி வழக்கில் ஜூலை 3 வரை நீதிமன்ற காவலில் இருந்த கேஜரிவால், ஜூன் 26 அன்று திகாா் சிறையில் இருந்து சிபிஐயால் கைது செய்யப்பட்டாா்.

கேஜரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், வேண்டுமென்றே மழுப்பலான பதில்களை அளித்ததாகவும் சிபிஐ தரப்பில் விசாரணை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கேஜரிவால் சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்தக்கூடும் என்றும் அச்சம் தெரிவித்திருந்தது.

ஜூன் 26 அன்று, கேஜரிவாலை மூன்று நாள்கள் சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்ட விசாரணை நீதிமன்றம், அவரைக் கைது செய்தது சட்ட விரோதமானது என்று அறிவிக்க மறுத்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.